சிறைக் கைதிகள் வாசிப்பதற்காக கொடையாகப் பெறப்பட்ட 15 ஆயிரம் புத்தகங்கள்

1 Min Read

 சென்னை, ஜன. 20 சிறைக் கைதிகள் வாசிப்பதற்காக 15 ஆயிரம் புத்தகங்களை சிறைத்துறை அதிகாரிகள் கொடையாகப்  பெற்றுள்ளனர். 46-ஆவது புத்தகக் கண்காட்சி தற்போது சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இங்கு சிறைத் துறை சார்பில் தனி அரங்கு (நுழைவாயில் 5, எண் 286) அமைக்கப்பட்டுள்ளது. சிறை யில் உள்ள கைதிகள் படிப்பதற்காக ‘சிறை வாசிகளுக்காக  புத்தக கொடை  செய்வீர்’ என வலியுறுத்தி ‘கூண்டுக்குள் வானம்’ என்ற தலைப்பில் அரங்கு வடிவமைக்கப்பட்டுள் ளது. புத்தகத்தை கொடையாகக் கொடுக்க விரும்புவோர் 99412 65748 என்ற எண்ணில் அழைத்தால் வீடு தேடிச் சென்று சிறைத் துறையினர் பெற்று வருகின்றனர்.

மேலும், பலரும் அரங்குக்கே நேரில் சென்று புத்தகங்களை இலவசமாக வழங்கி வருகின்றனர். அதன்படி இதுவரை சிறை கைதிகளுக்காக 15 ஆயிரம் புத்தங்கள் கொடையாகப் பெறப்பட்டுள்ளன என சிறைத்துறை டிஅய்ஜி முருகேசன் தெரிவித்தார். நேற்று (19.1.2023) சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சிறைத் துறை யினரின் புத்தக அரங்கை நேரடியாக பார்வையிட்டு 100 புத்தங்களை கொடையாக வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *