குடியரசு தின விழாவில் தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் : தலைமை செயலாளர் வெ.இறையன்பு

Viduthalai
1 Min Read

 சென்னை, ஜன .20 குடியரசு தினவிழாவில் தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.   வருகிற 26-ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று  தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கமாக சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது.  இந்த நிலையில் குடியரசு தின விழாவில் தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்கள் கொடி யேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் வெ.இறையன்பு கடிதம் எழுதி உள்ளார். அதில் 15 விதமான அறிவுரைகளை சுட்டிக்காட்டி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *