‘நீட்’ விலக்கு மசோதா மீண்டும் விளக்கம் கேட்கிறது ஒன்றிய அரசு

1 Min Read

சென்னை, ஜன.20- நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஒன்றிய அரசு மீண்டும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளதாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  சென்னையில் செய்தியாளர் களிடம் நேற்று (19.1.2023) கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, கடந்த 13ஆம் தேதி நீட் விலக்கு மசோதா தொடர்பாக, ஒன்றிய ஆயுஷ் அமைச்சகத்திடம் இருந்து மீண்டும் விளக்கம் கேட்டு கடிதம் வந்துள்ளது. ஏற்கெனவே தமிழ்நாடு அரசு மற்றும் சட்ட வல்லுநர்களால் பரிந்துரைக்கப்பட்டு அனுப்பப்பட்ட விளக்கத்தில் இருந்து, மேலும் ஒரு சிறிய விளக்கம் பெறுவது குறித்து அவர்கள் கேட் டுள்ளனர்.

இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி, விரைவில் உரிய பதில் அனுப்பப்படும். நீட் மசோதா நிராகரிக்கப்படவில்லை. அவர்களுக்கு இருக் கும் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் வகையில், தொடர்ச்சியாக விளக்கம் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் 3,949 செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்தந்த மாவட்டங்களில் உள்ள சுகாதார மய்யங்களில், செவிலியர் பணி நியமனம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. பிப்ரவரி மாத இறுதிக்குள் 3,949 பணியிடங்களும் நிரப்பப்படும். கரோனா காலத்தில் பணியாற்றிய 1,800 செவிலியர்களும் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடர்பாக நான்கு மாதங்களுக்கு முன்பே அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். ஏற்கெனவே அவரது அறிக்கைக்கு பதில் அளித்துள்ளோம். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *