காஷ்மீரில் பயணித்தார் ராகுல் காந்தி

1 Min Read

சிறீநகர், ஜன. 20- பஞ்சாப்பை தொடர்ந்து ராகுல் காந்தியின் நடைப் பயணம் காஷ்மீருக்குள் நுழைந்தது. காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.  பல்வேறு மாநிலங்களை கடந்த இந்த நடைப்பயணம் கடைசியாக பஞ்சாப்பில் நடந்து வந்தது. அங்கும் தனது நடைப் பயணத்தை நிறைவு செய்து விட்டு லகன்பூர் எல்லை வழியாக காஷ் மீருக்குள் நுழைந்தார் ராகுல் காந்தி. 

லகன்பூர் எல்லையில் மகாராஜா குலாப் சிங் சிலை அருகே அவரை வர வேற்க ஏராளமானோர் கூடியிருந்தனர். அவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, ‘காஷ்மீர் மக்களின் துயரங்களை பகிர்ந்து கொள்ள இங்கு வந்துள்ளேன். என்னோடு நடைப்பயணத்தில் பங்கேற்று, இந்தி யாவை பாதுகாப்போம் என்ற எனது திட் டத்துக்கு ஆதரவு தாருங்கள்’ என கூறி னார். தனது மூதாதையர்கள் காஷ்மீரை சேர்ந்தவர்கள் என்பதால், தனது வீட்டுக்கு திரும்பியது போன்று உணர்வதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *