சிறீநகர், ஜன. 20- பஞ்சாப்பை தொடர்ந்து ராகுல் காந்தியின் நடைப் பயணம் காஷ்மீருக்குள் நுழைந்தது. காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு மாநிலங்களை கடந்த இந்த நடைப்பயணம் கடைசியாக பஞ்சாப்பில் நடந்து வந்தது. அங்கும் தனது நடைப் பயணத்தை நிறைவு செய்து விட்டு லகன்பூர் எல்லை வழியாக காஷ் மீருக்குள் நுழைந்தார் ராகுல் காந்தி.
லகன்பூர் எல்லையில் மகாராஜா குலாப் சிங் சிலை அருகே அவரை வர வேற்க ஏராளமானோர் கூடியிருந்தனர். அவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, ‘காஷ்மீர் மக்களின் துயரங்களை பகிர்ந்து கொள்ள இங்கு வந்துள்ளேன். என்னோடு நடைப்பயணத்தில் பங்கேற்று, இந்தி யாவை பாதுகாப்போம் என்ற எனது திட் டத்துக்கு ஆதரவு தாருங்கள்’ என கூறி னார். தனது மூதாதையர்கள் காஷ்மீரை சேர்ந்தவர்கள் என்பதால், தனது வீட்டுக்கு திரும்பியது போன்று உணர்வதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.