சின்னசேலம் ஒன்றிய தலை வரும், பெரியார் தலைமையில் திருமணம் செய்து கொண்ட வரும், சுயமரியாதைச் சுடரொளி புலவர் கு.அன்டிரன் ஆசிரியரின் நண்பருமான கா.அசன் அவர் களின் மகன் அப்துல் அஜிஸ் (வயது 51) – பட்டதாரி ஆசிரியர் 17.01.2023 அன்று இயற்கை எய்தினார்.
நயினார் பாளையத்தில் மாவட்ட தலைவர் ம.சுப்பராயன் தலைமையில் தோழர்கள் பெ.சயராமன் மாவட்ட இலக்கிய அணித்தலைவர் , த.பெரியசாமி மாவட்ட அமைப்பாளர், கல்லக்குறிச்சி நகர தலைவர் இரா.முத்துசாமி;செயலாளர் நா.பெரியார், மூரார் பாளையம் கிளைக் கழகத் தலைவர் இரா. செல்வமணி ஆகியோர் 18-1-2023 அன்று அன்னாரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.