திராவிட மாடல் விளக்க பரப்புரைப் பொதுக்கூட்டத்தை எழுச்சியோடு நடத்திடுவோம்

2 Min Read

தேவகோட்டை கலந்துரையாடலில் தீர்மானம்

திராவிடர் கழகம்

தேவகோட்டை, ஜன. 20- தேவ கோட்டை ஒன்றிய, நகர திராவிடர் கழகம் சார் பில் கலந்து ரையாடல் கூட்டம்  17.1.2023 அன்று மாலை, தேவகோட்டை யில் கொ.மணிவண்ணன் இல்லத்தில் நகரத் தலை வர் வி.முருகப்பன் தலை மையில் நடைபெற்றது.

 நிகழ்வுக்கு மாவட்டத் துணைத் தலைவர் கொ.மணிவண்ணன், நகர செயலாளர் வழக்குரை ஞர் முத்தரசு பாண்டியன், ஒன்றிய செயலாளர் 

அ. ஜோசப் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

மாவட்ட கழக தலை வர் ச.அரங்கசாமி, மாவட்ட செயலாளர் ம.கு.வை கறை, காரைக்குடி நகர தலைவர் ந.ஜெகதீசன் நகர செயலாளர் தி.கலை மணி, ந.பாரதிதாசன், சிவ.தில்லை ராஜா, ம.வள் ளியம்மை, ம.பாவாணன் 

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. தமிழ்நாடு அரசின் சார்பில் 2023 ஆம் ஆண் டுக்கான தந்தை பெரியார் விருதினை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு அவரின்  பெரும் பணியை பாராட்டி விருதினை வழங்கிப் புக ழாரம் சூட்டி இருக்கும் தமிழ்நாடு அரசிற்கு நன் றியினைத் தெரிவித்துத் தீர்மானிக்கப் படுகிறது.

2. பிப்ரவரி 26 அன்று தேவகோட்டையில் தமி ழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் சமூக நீதிப் பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பொதுக் கூட்டத்தை மிகச் சிறப் பான வகையில் எழுச்சி யோடு நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

3. தமிழர் தலைவர் பங் கேற்கும் பொதுக்கூட்ட விளங்க  தெருமுனை பரப்புரை கூட்டத்தை 24.02.2023 அன்று சிறப்பாக நடத்திடவும், நகரத்தில் சுவர் எழுத்து, ஆட்டோ விளம்பரம் உள்ளிட்டவற்றை ஒருங் கிணைத்து சிறப்பாக செய்வதெனவும் தீர்மா னிக்கப்படுகிறது.

4 .  தேவகோட்டை நக ராட்சியும், திருவள்ளுவர் தமிழ் மன்றமும் இணைந்து தியாகிகள் பூங்கா மேல் புறம் சங்கு ஒலிக்கிற போது மணிக்கொரு முறை திருக் குறளும், பொருளும் முழக் கம் செய்யப்படுகிறது அத் தகைய சிறப்பான தமிழ்ப் பணியை தொடர்ந்து செய் திடும் பொறுப்பாளர் களை தேவகோட்டை ஒன் றிய திராவிடர் கழகம் பாராட்டி தம் மகிழ்வி னைத் தெரிவிக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *