ராஜபாளையத்தில் 45 மாணவர்களுடன் தொடங்கிய பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

2 Min Read

அரசியல்

இராஜபாளையம், அக். 29 – இன்று (29.10.2023) இராஜபாளையம் மாவட்ட திராவிடர் கழகம் நடத்திய  பெரியா ரியல் பயிற்சிப் பட்டறை இராஜபா ளையம் பி.எம்.ஆர். முத்து மகால் திருமண அரங்கில் 45 மாணவர்களு டன் மிக எழுச்சியுடன் நடைபெற்றது.

மாவட்ட கழக செயலாளர் இரா. கோவிந்தன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

தலைமைக் கழக அமைப்பாளர் இல. திருப்பதி பெரியாரியல்  பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்து உரையாற்றினார். இராஜபாளையம் மாவட்டதிராவிடர் கழகத் தலைவர் பூ.சிவக்குமார் தலைமையேற்று உரையாற்றினார்.

விருதுநகர் மாவட்ட தலைவர் கா. நல்லதம்பி. பகுத்தறிவார்கழக மாவட்ட அமைப்பாளர் சாத்தூர் நகர மன்ற துணைத் தலைவர் பா.அசோக், விருதுநகர் மாவட்டச் செயலாளர் தி.ஆதவன். திருவில்லி புத்தூர் ஒன்றிய அமைப்பாளர் கு.போத்திராஜ், ராஜபாளையம் நகர செயலாளர் இரா.பாண்டிமுருகன், இராஜபாளையம் ரவி ஆகியோர் முன்னிலையேறு உரையாற்றினர்.

பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு மாநில தலைவர் மா.அழகிரி சாமி “தந்தை பெரியார் ஓர் அறி முகம்” என்ற தலைப்பில் முதல் வகுப்பெடுத்தார்.

திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி “பெரியாரின் பெண்ணு ரிமை சிந்தனைகள்” என்ற தலைப் பிலும், திராவிடர் கழக கிராம பிரச் சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் க. அன்பழகன் “பார்ப் பன பண்பாட்டு படையெடுப்புகள்” என்ற தலைப்பிலும், எழுத்தாளர் வி.சி.வில்வம்  “வாழ்வியலே பெரியாரியல்”  என்ற தலைப்பிலும், “நீதிக்கட்சி சுயமரியாத இயக்க வரலாறு” என்ற தலைப்பிலும், பகுத் தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் முனைவர் வா.நேரு, திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் “தமிழர் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி அவர்களின் சாத னைகள்” என்ற தலைப்பிலும், புரப சர் மதுரை சுப.பெரியார் பித்தன் “மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கம்” என்ற தலைப்பிலும் தொடர்ந்து வகுப்பு எடுத்து வருகின் றனர். திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் பெரியாரியல் பயிற் சிப் பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் நிகழ்வை ஒருங்கி ணைத்து நடத்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *