பழநி முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு: தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தகவல்

1 Min Read

பழநி, ஜன. 22- கரூரைச் சேர்ந்த தமிழ் ராஜேந்தி ரன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பழநி முரு கன் கோயில் குடமுழுக்கு ஜன. 27இல் நடைபெறு கிறது. முருகன் தமிழ்க் கடவுள். இதனால் குட முழுக்கின்போது தமிழில் மந்திரம் ஓதப் பட வேண்டும். தமிழ் நாட்டில்  கோயில் குட முழுக்கில் தமிழில் மந்தி ரம் ஓத வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை 2020இல் உத்தர விட்டுள்ளது. சமீபத்தில் தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு பழநி முருகன் கோயிலுக்கும் பொருந்தும். எனவே பழநி முருகன் கோயில் குட முழுக்கின்போது தமிழில் மந்திரம் ஓத உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ண குமார், ஆர்.விஜயகுமார் அமர்வு முன்பு விசார ணைக்கு வந்தது. அரசு வழக்குரைஞர் வாதிடும் போது, தமிழ்க் கடவுள் முருகன். இதனால் தமி ழில் குடமுழுக்கு நடத் துமாறு கேட்க வேண்டிய தில்லை.

பழநி முருகன் கோயிலில் குட முழுக்கின் போது தமிழில் மந்திரம் ஓத அனைத்து நடவ டிக்கைகளும் எடுக்கப் பட்டுள்ளது என்றார்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பழநி முருகன் கோயில் குடமுழுக்கில் தமிழில் மந்திரம் ஓதப்படுவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தர விட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *