மாலத்தீவில் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Viduthalai
1 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை,அக்.29- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (28.10.2023) ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதிய கடி தத்தில், மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட் டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களையும், அவர்களது மீன் பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீன வர்கள் மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் 23-.10.-2023 அன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை விரைவில் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் நேற்று (28-10-2023) கடிதம் எழுதியுள்ளார்.

ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப் பிட்டுள்ளதாவது,

அக்கடிதத்தில், தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீன் இறங்குதளத்திலிருந்து, 1-10-2023 அன்று, மிழிஞி-ஜிழி-12-விவி-6376 பதிவு எண் கொண்ட விசைப்படகில்  மீன் பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள், 23.10.2023 அன்று தினாது தீவு அருகே மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள் ளனர் என்றும், உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம், மாலத்தீவு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களையும், அவர்களது மீன் பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட வேண்டுமென்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் கேட்டுக் கொண்டுள்ளார். 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *