‘நீட்’ தேர்வு விலக்கு: ஒரு வாரத்தில் ஒன்றிய அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் அமைச்சர் ரகுபதி தகவல்

1 Min Read

அரசு, தமிழ்நாடு

புதுக்கோட்டை, ஜன. 24- நீட்’ தேர்வு விலக்கு தொடர்பான மசோதா குறித்த விளக்கம் ஒரு வார காலத் தில் ஒன்றிய அரசுக்கு அனுப்பப் படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார். 

புதுக்கோட்டையில் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி நேற்று (23.1.2023) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ‘நீட்’ தேர்வு விலக்கு தொடர்பான மசோதா குறித்து ஒன்றிய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தில் இருந்து மீண்டும் ஒரு விளக்கம் கேட்டு கடிதம் வந்திருக்கிறது. அதனை மக்கள் நல்வாழ்வு துறை பரிசீலித்து அதற் குரிய விளக்கங்களை தயாரித்து தரும். சட்டத்துறையும் உதவியாக இருந்து ஒப்புதலை பெறும். அதன் பிறகு அந்த விளக்கத்தை மக்கள் நல்வாழ்வு துறை ஒன்றிய அரசுக்கு அனுப்பும். அந்த விளக்கம் என்ன என்பதை ஒருவாரத்தில் சொல்வ தாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.

சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் திருந்தி வாழ தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுக் கோட்டை மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்படுமா? என கேட்கிறீர்கள். பக்கத்தில் உள்ள சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சமீபத்தில் அரசு சட்டக்கல்லூரி தொடங்கப் பட்டுள்ளது. எனவே தற்போது புதுக்கோட்டையில் அரசு சட்டக் கல்லூரி உடனடியாக தொடங்க வாய்ப்பு இல்லை. இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் வேறு சில மாவட்டங்களில் அரசு சட்டக் கல்லூரி தொடங்குவதற்கான அறிவிப்புகள் வெளிவரும். ஆளுநர் ஆர்.என்.ரவி ‘தமிழ்நாடு’ என்ற வார்த்தையை பயன்படுத்த தொடங்கியிருப்பது தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி. தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றி. எதிர்ப்பலைகள் உருவாகியதால் தமிழ்நாடு என்ற வார்த்தை எல்லோராலும் பாராட்டப்படு கிறது, சொல்லப்படுகிறது – இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *