வடமாநில தொழிலாளர்கள் அதிகரிப்பு: ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்ட தென்னை தொழிலாளர்

1 Min Read

சென்னை, ஜன. 24- திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வடமாநில தொழிலாளர்கள் வருகையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தென்னை தொழிலாளர்கள், கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு தென்னை தொழிலாளர் பேரவையின் சார்பில் அதன் தலைவர் கருப்புசாமி தலைமையில் 400-க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் இப்போராட்டத்தில் ஈடு பட்டனர்.

பின்னர் கோட்டாட்சியரிடம் அளித்த மனுவில், “கோவை, திருப் பூர் மாவட்டங்களில் பல ஆயிரம் தென்னை தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

குறைந்த கூலிக்கு வடமாநில தொழிலாளர்களை பயன்படுத் துவதால், தமிழ்நாட்டு தொழிலாளர்கள் வேலையிழந்து வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. 

எனவே, தமிழ்நாட்டு தொழிலா ளர்களின் வாழ்வாதாரத்தை பாது காக்க வேண்டும்.

தென்னை தொழிலாளர்கள் நல வாரியம் அமைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *