ஆளுநர் மாளிகை வெளியிட் டுள்ள குடியரசு நாள் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு

2 Min Read

தமிழ்நாடு

சென்னை, ஜன. 24- ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள குடியரசு நாள் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசின் இலச்சினை, திருவள்ளுவர் ஆண்டு ஆகியவை இடம் பெற்றுள்ளன.

பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழகம், தமிழக ஆளுநர் எனக் குறிப்பிடப்பட்டு அழைப் பிதழ் வெளியாகி இருந் தது சர்ச்சையான நிலை யில் தற்போது ஆளுநர் மாளிகை வெளியிட் டுள்ள குடியரசு தின விழா அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர், தமிழ் நாடு அரசின் இலச்சினை, திருவள்ளுவர் ஆண்டு ஆகியவை இடம் பெற் றுள்ளன.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மை யில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழ கம் எனக் கூறுவது பொருத்தமாக இருக்கும் என்று கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து சட்டப் பேரவையில் பேசிய போது திராவிடம், பெண் ணுரிமை, அம்பேத்கர், அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட பெயர்களைத் தவிர்த்து விட்டு பேசினார். இது நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியது. தி.மு.க, காங்கிரஸ் உள் ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளுநருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளுநருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட் டனர்.தொடர்ந்து ஆளுநர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என்றும் தமிழ்நாடு அரசின் இலச் சினை, திருவள்ளுவர் ஆண்டு என எதுவும் இடம்பெறாமல் வெளி யானது. இதையடுத்து தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆளுநரின் பொங்கல் விழாவை புறக்கணித்தன. அதோடு தி.மு.க நாடாளுமன்றக் குழு ஆளுநருக்கு எதிராக குடியரசுத் தலைவர் முர்முவிடம் மனு அளித் தனர். அதன் பின்னர், ஆளுநர் தமிழகம் சர்ச் சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக் கம் அளித்து அறிக்கை வெளியிட்டார்.

இந் நிலையில், ஜனவரி 26ஆம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்ப டுகிறது.

இதையொட்டி தமிழ்நாடு ஆளுநர் மாளிகை விடுத்துள்ள அழைப்பிதழில் தமிழ் நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி எனக் குறிப் பிட்டு அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதில் திருவள் ளுவர் ஆண்டு, தமிழ்நாடு அரசின் இலச்சினை ஆகியவையும் இடம்பெற் றுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *