குடந்தை குருசாமி விடுதலை சந்தா தொகையும், புதுக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் இராவணன் விடுதலை உண்மை சந்தா தொகையும் தமிழர் தலைவரிடம் வழங்கினர். எஸ். அப்துல் லத்தீப் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூ.5,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். அய்க்கிய ஜனதா தள தமிழ்நாடு மாநில செயலாளர் தமீமுன் அன்சாரி, தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தார். வீகேயென் பாண்டியன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். இணையத்தில் தொடர்ந்து பகுத்தறிவு கருத்துக்களை பரப்பி வரும் புதுக்கோட்டை இளைஞரணி தோழர் கார்ல் மார்க்ஸ்க்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டினார்.