வேலையில்லா பட்டதாரிகள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

Viduthalai
1 Min Read

சென்னை, ஜன. 25- சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பத்தாம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி, பிளஸ்-2, பட்ட யப் படிப்பு மற்றும் பட்டப் படிப்பு போன்ற கல்வித் தகுதிகளை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து  5  ஆண்டுகளுக்கும் மேல் வேலை வாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டு மய்யத்தை அணுக வேண் டும்.

மேலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாண விகள் கிண்டியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். 

தகுதியுள்ளவர்கள் கிண்டியில் உள்ள மாவட்ட  வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மய்யத்தில் விண்ணப்ப  படிவங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *