சகோதரர் நாஞ்சில் சம்பத் அவர்கள் உடல் நலம் குன்றி, குமரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்ற செய்தி கேட்டு மிகவும் கலங்குகிறோம்.
விரைவில் அவர் குணமடைந்து வழக்கம் போல் தனது தொண்டறப் பணிகளைத் தொடர வேண்டுமென விரும்புகிறோம்.
முதலமைச்சர் முனைப்புடன் உதவிட உடனடியாக ஆணை பிறப்பித்திருப்பது நமது நம்பிக்கையை அகலப்படுத்துகிறது. நன்றி!
சென்னை தலைவர்
26.1.2023 திராவிடர் கழகம்