நாஞ்சில் சம்பத் விரைந்து குணமடைய விருப்பம் தமிழர் தலைவர் ஆசிரியர்

1 Min Read

சகோதரர் நாஞ்சில் சம்பத் அவர்கள் உடல் நலம் குன்றி, குமரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்ற செய்தி கேட்டு மிகவும் கலங்குகிறோம்.

விரைவில் அவர் குணமடைந்து வழக்கம் போல் தனது தொண்டறப் பணிகளைத் தொடர வேண்டுமென விரும்புகிறோம்.

முதலமைச்சர் முனைப்புடன் உதவிட உடனடியாக  ஆணை பிறப்பித்திருப்பது நமது நம்பிக்கையை அகலப்படுத்துகிறது. நன்றி!

சென்னை                                                                                                            தலைவர்

26.1.2023                                                                                                  திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *