அவை நிகழ்வை கைபேசியில் பதிவு செய்த விவகாரம் உரிமைக்குழு விசாரணை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன. 26- சட்டப்பேரவையில், பேரவை நிகழ்வுகளை ஆளுநரின் விருந்தினர் கைபேசியில் பதிவு செய்த விவகாரத்தில், அவைக்காவலர்கள் உள்ளிட்டோரிடம் உரிமைக்குழு விசாரணை நடத்தியது.

சட்டப்பேரவையில் ஜன.9ஆம்தேதி நடந்த, ஆண்டு முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது ஆளுநருடன் வந்த விருந்தினர்களில் ஒருவர், பேரவை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்தபடி, பேரவை நிகழ்வுகளை தனது கைபேசியில் பதிவு செய்தார்.

இதுதொடர்பாக, சட்டப்பேரவையில் உரிமை மீறல் பிரச்சினையை சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா எழுப்பி,உரிமைக் குழுவுக்கு அனுப்பி விசாரிக்க வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் வலியுறுத்தினார்.

இதையடுத்து, இதில் அவை உரிமை மீறல் இருப்பதாக கருதுவதால், ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, அவை உரிமைக் குழுவுக்கு உத்தரவிடுவதாக பேரவைத்தலைவர் அப்பாவு அறிவித்தார்.

இந்நிலையில் அவை உரிமைக்குழுவின் கூட்டம், பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி தலைமையில் நேற்று (25.1.2023) நடைபெற்றது. கூட்டத்தில், பொள்ளாச்சி ஜெயராமன், இனிகோ இருதயராஜ், ஈஸ்வரப்பன், இ.கருணாநிதி, நல்லதம்பி, பிரின்ஸ் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, சட்டப்பேரவை கூட்டத்தின் போது பணியில் இருந்த அவைக்காவலர்கள், நேரில் பார்த்த அலுவலர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, விதிகளை மீறி சட்டப்பேரவை நிகழ்வுகளை பதிவு செய்தவரிடம் அடுத்தகூட்டத்தின்போது விசாரணை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *