ஊழியர் வேலைநிறுத்தம் வங்கிகள் 5 நாட்கள் செயல்படாது

Viduthalai
1 Min Read

தமிழ்நாடு

சென்னை, ஜன. 26- குடியரசு நாள் விழா மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரண மாக, இடையில் ஒரு நாள் தவிர வங்கிகள் 5 நாட்கள் செயல்படாது. இதனால், வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வாரத்துக்கு 5 நாட் கள் வேலை, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூ தியத்தை மீண்டும் செயல் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் வரும் 30ஆம் தேதிதிங்கள் கிழமை, 31ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆகிய 2 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துகின்றனர்.

இதனால், அன்றைய தினம் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதிலும் உள்ள அனைத்துப் பொதுத் துறை வங்கிகளும் செயல் படாது.

மேலும், குடியரசு தினத்தை முன்னிட்டு வங்கிகளுக்கு 26ஆம் தேதி அரசு விடுமுறை நாளாகும். வரும் சனிக் கிழமை (28ஆம் தேதி) 4ஆவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினமும், மறுநாள் 29ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை என்பதாலும் வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும். இடையில் நாளை வெள்ளிக்கிழமை (27ஆம் தேதி) ஒரு நாள் மட்டும் வங்கிகள் செயல் படும்.

வங்கிகள் 5 நாட்கள் செயல்படாததால் வங்கிச் சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும். அதே சமயம், ஏடிஎம் மய்யங்களில் போதிய அளவு பணம் வைத்தி ருக்க நடவடிக்கை எடுக் கப்பட்டு உள்ளதாகவும் மற்றும் இணையதளம் சேவைகள் வழக்கம் போல செயல்படும் என வும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, மும் பையில் துணை தலைமை தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில், ஊழியர் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து இந்திய வங்கிகள் சங்கம் எவ்வித உத்தரவா தமும் அளிக்கவில்லை. இதையடுத்து, சமரச கூட் டம் நாளை (27ஆம் தேதி) தள்ளி வைக்கப் பட்டுள்ளது.

ஏடிஎம்மில் போதிய அளவு பணம் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *