கண்ணுக்குள் எட்டும் வரை எதிர்க்கட்சிகளைக் காணவில்லை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழ்நாடு

சென்னை,ஜன.27- சென்னை சத்தியமூர்த்தி பவனில் குடியரசு நாள்  கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று (26.1.2023) நடந் தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினார். அதன்பின் சத்திய மூர்த்தி பவன் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக, கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு சட்ட மன்ற இடைத் தேர்தலில் எங்களுடைய கூட்ட ணிக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு அளித்து இருக் கிறது. ஒத்த கருத்து டையவர்கள் பல்வேறு மேடைகளில் இருந்தாலும், அவர்களை எல்லாம், ஒரே மேடைக்கு அழைத்து வந்து ஒன்றுபடுத்த வேண்டும் என்று தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் முடிவு செய்து, தமிழ் நாட்டில் அந்தப் பணிகளை செய்திருக்கிறார்கள்.

எங்களுடைய மேடைக்கு கமல்ஹாசன் வந்திருக் கிறார். அவரை வரவேற்கி றோம். அவருடைய இயக்கத் தின் ஆதரவு எங்களுக்கு மகத்தான வெற்றியை தரும். ஈரோடு கிழக்குத் தொகுதி யில் களத்தில் நாங்கள் பணி யாற்று கிறோம். மகத்தான வெற்றி எங்களுக்கு இருக் கிறது.

ஈரோட்டில் எங்களு டைய தோழமைக் கட்சிக ளின் தோழர்கள் பம் பரமாக சுழன்று அங்கே வேலை செய்கிறார்கள். ஆனால் ஈரோட்டில் தேடி, தேடி பார்க் கிறோம். எதிர்தரப்பு கண்ணுக்கு எட்டிய தூரம் காணப்படவே இல்லை. எனக்கு ஆச்சரிய மாக இருக்கிறது. அடக்கமே தெரியாத சிலர் ரொம்ப அடக்க மாக பேசுகிறார்கள். இந்த தேர் தல் அவர் களுக்கு ரொம்ப படிப் பினையைத் தந்திருக் கிறது என்று கருதுகிறேன். 

நாங்கள் களத்தில் மகத்தான வெற்றியை பெறு வோம். எங்கள் வேட்பாளர் ஈ.வெ. கி.ச.இளங்கோவன் சிறந் தவர். அவர் வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *