குடியரசு நாள் அணிவகுப்பு விழாவிற்கு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவர் தேர்வு

1 Min Read

தமிழ்நாடு, மற்றவை

வல்லம், ஜன. 27–  பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் தேசிய மாணவர் படை அமைப்பை சேர்ந்த மூன்றாம் ஆண்டு வணிகவியல் பட்டப் படிப்பு பயிலும்  மாணவர் ஆ.அண்ணாமலை டில்லியில் 26.1.2023 அன்று நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்றார். மேலும்  தமிழ்நாட்டளவில் 122 மாணவர்களில்  இவரும் ஒருவராக  அணிவகுப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

மேலும் தேர்வாகி யுள்ள அண்ணாமலை பத்துக்கும் மேற்பட்ட முகாம்களில் சிறப்பாக செய்யப்பட்டதால் பிர தம மந்திரி ரேலி எனப் படும் அணிவகுப்பில் 28.01.2023 அன்று  நடை பெறும் விழாவில் இம் மாணவர் பங்கேற்கிறார். குடியரசு நாள் அணி வகுப்பில் விழாவில் பங் கேற்க உள்ள மாணவரை பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் செ.வேலுசாமி, பல் கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் பூ.கு.சிறீ வித்யா, தேசிய மாணவர் படையின் அதிகாரி லெப் டிணட் பி.விஜயலெட் சுமி, லெப்டிணட் உ.சர வணக்குமார், முதன்மை யர்கள், இயக்குநர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவரைப் பாராட்டினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *