குழந்தை மணக் கொடுமை!

1 Min Read

ஞாயிறு மலர்

1794இல் மகாராட்டிரத்தில் மகாதோஜி இறந்தபின் நானா பட்னிள் (நானாபர்னவிஸ்) என்னும் வைதீகப் பார்ப்பனன் மராட்டியப் பேரரசின் தலைவன் ஆனான்.

அவனுக்கு 9 மனைவிமார்கள் இருந்தார்கள். அவன் இறக்கும்போது அவனுக்கு வயது ஏறத்தாழ 60க்கு மேல் இருக்கும் அப்போது இருந்த அவனது இரு மனைவியர்களில் ஒருத்தி 14 வயது உடையவளாகவும் மற்றொருத்தி 9 வயது உடையவளாகவும் இருந்திருக்கின்றனர் என்று சரித்திரம் கூறுகின்றது.

பேஷ்வாக்கள் குடும்பங்களில் குழந்தை மணம்

பேஷ்வாக்கள் குடும்பங்களில் குழந்தை மணம் எவ்வளவு மோசமாக நடைபெற்றது என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டைக் காண்போம்.3 வயது உடைய பார்ப்பனப் பெண் ஒருத்தியை 45 வயதுடைய ஆடவன் ஒருவன் மணந்து கொள்ளலானான். இச்சங்கதி அக்குழந்தையின் பெற்றோர்களுக்குத் தெரியாது. தெரிந்த உடனேயே அந்தத் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாமல் வேறு ஒருவனுக்கு அக்குழந்தை மணம் செய்துக்கொடுக்கப்பட்டது என்ற குறிப்பும் காணப்படுகின்றது.

( நூல்: வரலாற்றில் பெண் கொடுமைகள், புலவர் கோ.இமயவரம்பன்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *