இஸ்ரேல் பாலஸ்தீன போரை நிறுத்த இந்தியா நெருக்கடி கொடுக்க வேண்டும்

Viduthalai
1 Min Read

தொல்.திருமாவளவன் கோரிக்கை

அரசியல்

சென்னை, அக். 30- விடுதலை சிறுத் தைகள் கட்சியின் தலைவர் திருமா வளவன் வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவித்து இருப்பதாவது:- 

அய்க்கிய நாடுகளின் பொது மன்றம் 27.10.2023 அன்று நிறை வேற்றிய தீர்மானத்தில், இஸ்ரே லியப் படைகளுக்கும் காசாவில் உள்ள ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே “உடனடியான, நீடித்த மனிதாபிமான அடிப்படையிலான போர்நிறுத்தத்திற்கு” அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் தரைப்படை தாக்குதலைத் தீவி ரப்படுத்தியுள்ளதாக செய்திகள் கூறுவதால், காசாவில் சிக்கியுள்ள பொதுமக்களுக்கு உயிர்காக்கும் பொருட்கள் மற்றும் மருத்துவ சேவைகளை “தொடர்ச்சியாகவும், போதுமான அளவிலும், தடையின் றியும்” வழங்க வேண்டும் என்றும் அய்நா தீர்மானம் வலியுறுத்தியுள் ளது. “மனிதாபிமான அடிப்படை யில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும்; பணயக் கைதிகளை நிபந்தனையின்றி விடு விக்க வேண்டும்; காசாவில் உள்ள மக்களின் தேவைகளுக்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்பட வேண்டும். பேரழிவு நம் கண்களுக்கு முன்னால் விரிந்து கொண்டிருக்கிறது” என அய்.நா. பொதுச் செயலாளர் தெரிவித்திருக்கிறார். 

அய்.நா. சபையில் நிறைவேற்றப் பட்டத் தீர்மானத்தை 120 நாடுகள் ஆதரித்து வாக்களித்த நிலையில் இந்தியா அந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்திருப்பது வரலாற்றுப் பிழையாகும். பாஜக அரசின் இந்தச் செயலை விடு தலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டிக்கிறோம். ஒருபுறம் பாலஸ்தீனத்தை ஆதரித்துக் கொண்டு இன்னொருபுறம் இஸ் ரேல் தொடுத்துள்ள போரையும் மறைமுகமாக ஆதரிப்பது இந்தியா வின் நன்மதிப்பை உலக அரங்கில் கெடுப்பதாக உள்ளது. 

இது இந்திய அரசின்மீது களங் கத்தை ஏற்படுத்தும் கறையாகப் படிந்துள்ளது. காசா மீதான தாக் குதல் உச்சக் கட்டத்தை அடைந்தி ருக்கும் நிலையில், இப்போதாவது இந்திய அரசு போர் நிறுத்தத்தை வலியுறுத்திக் குரலெழுப்ப வேண் டும். ‘அய்.நா. பொது மன்றத்தின் தீர்மானத்துக்கு மதிப்பளித்துப் போர் நிறுத்தம் செய்யவேண்டும்’ என இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *