மனிதாபிமான தேவைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் அன்டோனியோ குட்டரெஸ்

Viduthalai
1 Min Read

அரசியல்

காத்மாண்டு, அக் 30- நேபாளத் தில் அய்.நா. பொதுச் செயலாளர் அன்டோ னியோ குட்டரெஸ் நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக தனது ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் கொல்லப்பட்ட 10 நேபாள மாணவர் களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அன் டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். “பொது மக்களின் பாதுகாப்பு என்பது முதன்மை யானது. மனித உயிர்களை பாதுகாக்க வேண்டும் என்றும், மனிதாபிமான தேவைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் போர் விதிகள் கூறுகின்றன. அந்த விதி களை யாருக்காகவும் மாற்ற முடியாது” என்று அன்டோனியோ குட்ட ரெஸ் பதிவிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *