இதுதான் குஜராத் மாடல் போலி அரசு அலுவலகம் மூலம் ரூ.4.16 கோடி மானியம் சுருட்டல்!

1 Min Read

சோட்டா உதேபூர், அக். 30- குஜ ராத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சோட்டா உதேபூர் மாவட்டத்தில் நீர்ப்பாசன திட்டங்களுக் கான செயல் பொறியாளர் அலுவலகத்தில் இருந்து நடப்பாண்டிற்கான சில அரசுத் திட்டங்களுக்கு ரூ.3.75 கோடி மானியம் கோரி திட்ட நிர்வாக அலுவலகத்திற்கு ஆவ ணங்கள் வந்துள்ளன. இதில் சந்தேகமடைந்த உயர் அதிகாரிகள் விசா ரணை நடத்தியதில், நீர்ப் பாசன துறைக்கு சோட்டா உதேபூரில் செயற்பொறி யாளர் அலுவலகமே இல்லை என்கிற அதிர்ச் சித் தகவல் வெளியானது.

அதைவிட அதிர்ச்சி கரமாக, கடந்த 2021-2022 மற்றம் 2022–2023 நிதி யாண்டுகளில் போலி அரசு அலுவலகத்திற்கு அரசு மானியமாக முறையே ரூ.197 கோடியும், ரூ218 கோடியும் நிதி விடுவிக்கப் பட்டுள்ளது. இந்த நிதி மொத்தமும் டிஜிட்டல் முறையில் இ-பேமெண்ட் டாக தரப்பட்டுள்ளது)

இதுதொடர்பாக காவல் துறையில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலி அரசு அலுவலகத்தை நடத்தி வந்த சந்தீப் ராஜ்புத் மற்றும் அவரது கூட் டாளி அரசு கான்ட்ராக் டர் அபு பக்கர் சையத் ஆகி யோர் கைது செய்யப் பட்டுள்ளனர். சந்தீப் ராஜ்புத் தன்னை ஒரு அரசு அதிகாரி எனக் கூறி 2021இல் இந்த போலி அரசு அலுவலகத்தை அமைத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *