அறந்தாங்கி பன்னீர்செல்வம் மறைவு

1 Min Read

மற்றவை

ஓய்வு பெற்ற தொடக்கக் கல்வி அலுவலர், திராவிட இயக்கத்தின் மீதும், தந்தை பெரியார் மீதும் மிகுந்த பற்று கொண்டவர். தொடர்ந்து  திராவிடர் கழகம் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று அறந்தாங்கி கழகத்திற்கு பக்கபலமாக பணியாற்றிய முதுபெரும் பெரியார் பெரும் தொண்டர் அறந்தாங்கி கோ.பன்னீர்செல்வம் (வயது 80) நேற்று (28.1.2023) மறை வுற்றார். கீழ்வேளூரில் தந்தை பெரியார் தன்மானப் பேரவையை தொடங்கிய போது பெரும் உறுதுணையாக இருந்தவர். அறந்தாங்கி நகர கழகத் தலைவராகவும் இருந் தவர். அறந்தாங்கி கழக மாவட்டம் சார்பில் பன்னீர்செல் வம் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செய்யப்பட்டு உறவினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *