பட்டுக்கோட்டையில் நேற்று (29.10.2023) வட சென்னை மாவட்ட கழக இளைஞரணிச் செயலாளர் சு.அரவிந்த குமார் – மகாலட்சுமி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு வரவேற்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் அரு.நல்லதம்பி, வட சென்னை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்டச் செயலாளர் புரசை சு.அன்புச் செல்வன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், பட்டுக்கோட்டை மாவட்ட கழக அமைப்பாளர் சோம.நீலகண்டன், நீலகண்டன், சிற்பி சேகர், இரத்தின சபாபதி, ரெ.திருமேனி, நெல்லுப்பட்டு இராமலிங்கம், நா.பார்த்திபன், பா.பார்த்திபன், முத்து துரைராஜ், ஓட்டுநர் அசோக் குமார் ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.