திராவிடர் கழக மகளிரணி திராவிட மகளிர் பாசறையின் மாநில கலந்துரையாடல் கூட்டம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் இன்று (30.1.2023) சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, அமைப்பாளர் தேன்மொழி, திராவிட மகளிரணி பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி மற்றும் மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான மகளிர் தோழர்கள் பங்கேற்றனர்.