ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

30.10.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: 

* தெலுங்கானாவில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும், கருநாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் நம்பிக்கை.

டெக்கான் கிரானிக்கல், சென்னை: 

* பிரதமராகும் எண்ணம் எனக்கு இல்லை. ஒன்றியத்தில் புதிய அரசு அமைக்க பாடுபடுவேன், என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி.

எகனாமிக் டைம்ஸ்:

* 61 திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதி வழங்கவில்லை, கருநாடகாவை அரசியல் பழிவாங்கும் நோக்கில் பாஜக செயல்படுவதாக கருநாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றச்சாட்டு.

* மராத்தா இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஒன்றிய, மகாராட்டிரா அரசுகளின் செயலற்ற தன்மை சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது என்று சரத்பவார் கண்டனம்.

தி டெலிகிராப்:

* சத்தீஸ்கரில் ஏழைகளுக்கு சுகாதார நலன்கள், நில மற்ற தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை உயர்த்தப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதி.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *