கழகத் தலைவர் இரங்கல்

1 Min Read

 தி.மு.கழகப் பொருளாளரும் – தி.மு.க. நாடாளுமன்றக்குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, எம்.பி., அவர்களின் மூத்த சகோதரி  திருமதி பவுனம்மாள் மறைவு

கழகத் தலைவர் இரங்கல்


ஆசிரியர் அறிக்கை

திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், தி.மு.க. நாடாளுமன்றக்குழுத் தலைவ ருமான டி.ஆர்.பாலு, எம்.பி., அவர்களின் மூத்த சகோதரியும் – சென்னை மாவட்ட தி.மு.க. மேனாள் செயலாளர் கோ.செங்குட்டுவன் அவர்களின் துணைவியாருமான திருமதி பவுனம்மாள் (வயது 88) அவர்கள், நேற்று (31.1.2023), பிற்பகல் மறைவெய்தினார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.

அன்னாரது உடல்,  இன்று (1.2.2023)  காலை 11.00 மணி வரை மன்னார்குடியில் உள்ள டி.ஆர்.பாலு அவர்களின் இல்லத்தில் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டு, அதன்பின்னர், அவரது சொந்த ஊரான தளிக்கோட்டையில் மாலை 4.00 மணியளவில் இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது. 

அவர் பிரிவால் வருந்தும் அருமைச் சகோதரர் டி.ஆர். பாலு அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை தலைவர், 

1.2.2023 திராவிடர் கழகம் 

குறிப்பு: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மன்னார்குடியிலிருந்த டி.ஆர். பாலு எம்.பி. அவர் களிடம் தொலைபேசி மூலம் இரங்கலும், ஆறுதலும் தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *