மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்.15ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

Viduthalai
2 Min Read

தமிழ்நாடு

சென்னை, பிப். 1- மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் வரும் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு அவகாசம் வழங்கப் படாது என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட் டமாக தெரிவித்துள்ளார்.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நேற்றுடன் (31.1.2023) நிறைவடைந்தது. இந்நிலையில், இந்த அவகாசத்தை மேலும் நீட்டிப்பது தொடர்பாக, சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது: மின்நுகர்வோர் மின் இணைப் புடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆண்டு நவ.15ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் உள்ள 2.67 கோடி மின்நுகர்வோரில் இன்று (நேற்று) வரை 2.42 கோடி மின்நுகர்வோர் தங்கள் ஆதார் எண்ணை இணைத் துள்ளனர். அதாவது, 90.69 சத வீதம் பேர் இணைத்துள்ளனர். 9.31 சதவீதம் பேர் இணைக்க வேண்டி யுள்ளது. வீடுகளுக்கான 2.38 கோடி மின்இணைப்புகளில் 15 லட்சம் பேர் இன்னும் இணைக் காமல் உள்ளனர். எஞ்சியுள்ள 9 சதவீத மின் நுகர்வோரும் பிப்.15 ஆம் தேதிக்குள் தங்களதுமின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பதற்காக, 15 நாள்கள் கால நீட்டிப்பு வழங்கப் பட்டுள்ளது. மின் வாரியம் மூலம் இனிமேல் கால நீட்டிப்பு வழங்கப் படாது. இதுவே இறுதி கெடு ஆகும். வீடுகள், விவசாய நிலங்க ளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உரிமையாளர்கள் இருக்கும்போது அவர்கள் ஆதார் எண் இணைக்க சில சவால்களை சந்திப்பதாக தெரிய வந்துள்ளது. இதை சரி செய்ய ஆலோசனை வழங்கப்பட் டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற அரசு துறைகள் பாக்கி வைத்துள்ள ரூ.4,500 கோடி மின் கட்டண நிலுவைத் தொகையை வசூலிப்பது குறித்து முதலமைச் சரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. விரைவில் நிதித் துறையுடன் பேசி அத்தொ கையை படிப்படியாக பெற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *