தமிழ்நாட்டில் மின்சார வாகனங்கள் ரூ.100 கோடி முதலீட்டில் திட்டங்கள்

1 Min Read

சென்னை, பிப். 1-  தமிழ்நாட்டின் முன்னணி மின் வாகன (EV)தொழில்நுட்ப நிறுவனமாகிய கேலிபர் கிரீன் வெஹிகிள்ஸ் லிமிடெட், குவாண்டம் எனர்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரான், மிலன், பிஜினெஸ் ஆகிய மூன்று அதிவேக மின்சார ஸ்கூட்டர்களை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தி யுள்ளது. இவற்றின் விற்பனையை முடுக்கிவிட, அடுத்த ஆறு மாதங்களில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பெருநகரங்கள்,  நடுத்தர நகரங்களில் ரூ. 100 கோடி  முதலீட்டில் 150 விற்பனை மற்றும் சேவை மய்யங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது, கேலிபர் நிறுவனம்.

தமிழ்நாடு அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் மண்டல இணை இயக்குநர் என்.இளங்கோவன், முனைவர் என்.பரசுராமன், ஆகியோர் குவாண்டம் மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தினர். இந்த நிகழ்வில் குவாண்டம் எனர்ஜி நிறுவனத்தின் இயக்குநர் சுக்கப்பள்ளி ராமகிருஷ்ண பிரசாத், கேலிபர் கிரீன் வெஹிகிள்ஸ் நிறுவனத்தின் தலைவர் மாணிக்கம் ஆகியோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *