கேரளாவில் குண்டுவெடிப்பு தமிழ்நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம்

Viduthalai
2 Min Read

அரசியல்

சென்னை, அக். 30- கேரளாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு நிகழ்வு எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் முடுக்கிவிடப்பட் டுள்ளன. ரயில், பேருந்து,விமான நிலையங்கள் காவல்துறையினரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில் நேற்று (29.10.2023) காலை அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்தன. இதில் 3 பெண்கள் உயிரிழந்த நிலையில், 52 பேர் காயம் அடைந்து மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இச்சம்பவம் தொடர்பாக கேரள மாநில காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடத்த தேசிய பாதுகாப்பு படையினரும், என்அய்ஏ அதிகாரிகளும் கேரளா விரைந்துள்ளனர். இதர ஒன்றிய, மாநில புலனாய்வு குழுவி னரும் நேரடி மற்றும் ரகசிய புலனாய்வில் ஈடுபட்டுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க கேரள குண்டு வெடிப்பை தொடர்ந்து தமிழ் நாட்டிலும் பாதுகாப்பு மற்றும் கண் காணிப்பு பணியை தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் முடுக்கி விட்டுள்ளார். குறிப் பாக, கேரளாவை ஒட்டியுள்ள தமிழ் நாடு பகுதி களான கோவை, தேனி, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி உள் ளிட்ட மாவட்ட எல்லைகளில் சோத னைகள் தீவிரப்படுத்தப்பட் டுள்ளன. அங்குள்ள சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர் தீவிர தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இம்மா வட்ட வனப் பகுதிகளில் தமிழ்நாடு காவல் துறையினருடன் வனத் துறை யினரும் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கேரளா மற்றும் பிற மாநிலங்களி லிருந்து தமிழ்நாட்டிற்கு சந்தேகப் படும்படியாக யாரேனும் வந் தாலோ, அத்துமீறி நுழைய முற் பட்டாலோ அவர்களை உடன டியாக கைது செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ரயில், பேருந்து, விமான நிலை யங்கள் காவலர்களின் பாது காப்பு வளையத்துக்குள் கொண்டு வரப் பட்டுள்ளன.

மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

இங்கு கண்காணிப்பும் அதிக ரிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப் பட்டினம், நெல்லை, கன்னியாகுமரி உட்பட தமிழ்நாட்டில் உள்ள 13 கடலோர மாவட்டங்களில் கட லோரபாதுகாப்பு குழும காவல் துறை கண்காணிப்பில் ஈடுபட்டுள் ளனர்.

மேலும், சந்தேகப்படும் படியான நபர்களின் நடமாட்டம் குறித்து அறிந்தால் அதுகுறித்து காவல்  துறையினருக்கு உடனடி யாக தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள தங்கும் விடுதிகள், காவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்டுள் ளனர். சந்தேகத்துக்குரிய நபர்கள் யாரேனும் தங்கி உள்ளார்களா, இங்கு வெடித்து சிதற கூடிய பொருட்கள் மற்றும் அதற்கான மூலப் பொருட்கள் ஏதேனும் பதுக்கப்பட்டுள்ளதா எனவும் காவல்துறையினர் சோதித்து வரு கின்றனர்.

பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்கள், வணிக வளாகங் கள், திரையரங்குகள், கோயில், மசூதி, தேவாலயங்கள், பூங்காக்க ளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் மாநில உளவு பிரிவு காவலர்களும் தகவல்களை திரட்டி வருகின்றனர்.

தமிழ்நாடு எப்போதும் பாது காப்பான மாநிலம். எனவே, இங்கு எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடமில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *