காரமடை – ‘சமூக நீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல்’ விளக்க பொதுக்கூட்ட பரப்புரை

Viduthalai
1 Min Read

 களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள்

திராவிடர் கழகம்

கோவை, பிப். 4- காரமடையில் பிப் 5இல் நடைபெறும் தமிழர் தலைவர் ஆசிரியர் பொதுக்கூட்ட அழைப் பிதழை திராவிட இயக்க உணர்வாளர்கள், தோழமை கட்சி பொறுப்பாளர் களை நேரில் சந்தித்து வழங் கும் களப் பணியில் கழக தோழர்கள் ஈடுபட்டனர்.

காரமடை அருகில் உள்ள சிக்காரம்பாளை யம் ஊராட்சி மன்ற தலை வர் அதிமுக சா.ஞான சேகரன் அவர்களை மாவட்ட தலைவர் 

சு. வேலுச்சாமி தலைமை யில் கழக தோழர்கள் சந்தித்தபோது அவர் பிப்.5இல் காரமடையில் நடைபெறும் சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பொதுக் கூட்டத்திற்கான  நன் கொடையாக ரூ.10 ஆயி ரம் தொகையை வழங்கி னார். நகர செயலாளர் வெ சந்திரன், காரமடை ஒன்றிய கழக தலைவர் அ.மு.ராஜா, தோழர் உத்திரிநாதன் ஆகியோர் இருந்தனர்.

தேக்கம்பட்டி சிவ குமார் தமது பங்களிப் பாக உணவு ஏற்பாடுக ளையும் மற்றும் நன் கொடையாக ரூபாய் 10 ஆயிரம் வசூல் செய்து வழங்குவதாக உறுதி செய்தார். 

காரமடை முருகன் ஸ்டோர் உரிமையாளர் தமது பங்களிப்பாக ரூ.5 ஆயிரம், வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் புருஷோத்தமன் ரூ 5 ஆயி ரம், நீலமலை புரமோட் டர் உரிமையாளர் தோழர் கள் கவிதா ஜெகதீஷ் ரூ,2000, வி.ஆர்.வெள் ளியங்கிரி ரூ.1000, திமுக மாவட்ட பிரதிநிதி துரை சாமி, அறிவியல் அச்சகம் தோழர் சண்முகசுந்தரம் தலா  ரூ.500 ஆகியோர்  நன்கொடை வழங்கினர்.

வெங்கடேஸ்வரா புளுமெட்டல் உரிமையாளர் நந்தகுமார்  ரூ.10 ஆயிரம், நதி ஒர்க் ஷாப் உரிமையாளர் அதி முக கட்சி தோழர் நாக ராஜ் ரூ.2ஆயிரம், தோழர் விஜயகுமார் ரூ.1000 நன்கொடை வழங்கினர். காலை முதல் நடைபெற்ற கழக களப்பணியில் நகர செயலாளர் வெ சந்திரன், காரமடை ஒன்றிய கழக தலைவர் அ.மு.ராஜா, தோழர் உத்திரிநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *