கோவையில் மாணவர்கள் – இளைஞர்கள் சந்திப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழகம்

கோவை, பிப். 4-  29.1.2023 அன்று காலை 11 மணி யளவில் வெள்ளலூர் தந்தை பெரியார் பகுத்தறி வுப் படிப்பகதில் மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்  மு.ராகுல் தலைமையில் கருத்தரங் கம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தி.க செந்தில்நாதன், மாவட்ட செயலா ளர் புலி யகுளம் க.வீரமணி, மாவட்ட துணைச் செயலாளர் காளி முத்து, நகர தலைவர் ஆறுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் 

திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் கருத்துரை வழங்கினார்

மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆ.பிரபா கரன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் த.க.கவு மன், நகர மாணவர் கழக அமைப்பாளர் ஆ.பெரியார் மணி, ஒண் டிப்புதூர் சசிக்குமார், ரா.சி.பிரபாகரன்  புலிய குளம் பகலவன், புலிய குளம் குகன், குணசேக ரன், வெள்ளலூர் மூவேந் திரன்,ஆகியோர் கலந்து கொண்டு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

தீர்மானம்: 1

சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டத்துக்கு 6.2.2023 அன்று கோவை மாவட்டம் பொள்ளாச் சிக்கு  வருகை தரும் தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு திராவிடர் கழக இளைஞரணி மாணவர் கழகம்  சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது என தீர்மா னிக்கப்படுகிறது.

தீர்மானம்: 2 

பெரியார் வீர விளை யாட்டு கழகம்  உருவாக்கு வது, வெள்ளலூர் படிப் பகத்தில் மாலை நேர பாடசாலை மற்றும் டி.என்.பி.எஸ்.சி பயிற்சி வகுப்பு நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்: 3

ஜனவரி 21 அன்று தஞ்சையில் நடைபெற்ற மாநில மாணவர் கழக கலந்துரையாடல் கூட் டத்தில் திராவிட மாண வர் கழக 80 ஆம் ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் ஆகஸ்ட் 5இல் திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டினை கோவை மாவட்டத்திற்கு வழங்கிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக் கூட்டம் நன்றியை  தெரிவித்துக் கொள்கின்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *