உலகப் புற்றுநோய் தினம் விழிப்புணர்வு பேரணி – நாடகம்

1 Min Read

சென்னை, பிப்.5 இன்று உலகமெங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 

உலகை அச்சுறுத்தும் உயிர்க்கொல்லி நோயாக பார்க்கப்படும் ‌புற்றுநோய் பாதிப்பின் அளவு ஒவ்வொரு ஆண்டும் 1 சதவிகிதம் அதிகரித்தே வருகிறது. 1984 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பேரில் 60 பேருக்கு இருந்த புற்றுநோயின் தாக்குதல், தற்போது 90 முதல்100 பேராக அதிகரித் துள்ளது. சரியான விழிப்புணர்வு, சீரான பழக்க வழக்கம் இருந்தால் புற்றுநோயைக் கண்டு அஞ்சத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். 

தற்போது உள்ள மருத்துவ முன்னேற்றத் தில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் அதனை முற்றிலுமாக குணப்படுத்தலாம். உரிய நேரத்தில் சரியாக சிகிச்சை பெறும் 100இல் 65 சதவிகிதம் பேர் காப்பாற்றப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக் கின்றன. உடல் கோளாறுகளின் அறிகுறியை அலட்சியம் செய்யாமல், குறிப்பிட்ட காலத்துக்கு மேல் நோய் அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம் என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப் படுகிறது. புகைபிடித்தல், தவறான உணவுப் பழக்கம், குடும்ப வழியாக வரும் பாதிப்பு என புற்றுநோய்க்கான காரணங்கள் பல கூறப்பட்டாலும், சரியான விழிப்புணர்வு, முறையான மருத்துவ ஆலோசனை இருந் தால் புற்றுநோயை வெல்லலாம் என்பதே மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *