சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பரப்புரை தொடர்பயணம் மேற்கொள்ளும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 13.02.2023 அன்று சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் பரப்புரை செய்ய இருப்பதை ஒட்டி புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் துண்டறிக்கைகள் விநியோகித்து கடை வசூல் செய்யப்பட்டது (02.02.2023). பாதையோரம் சிறிய கடை நடத்திவரும் பெண்மணியிடம் ‘பெரியாரைத் தெரியுமா?’ என்று வினவிய போது “அவர் இல்லாமலா நாம் படித்து இப்படி வேலை செய்துக் கொண்டிருக்கிறோம்?” என்று திருப்பிக் கேட்டார்! மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பங்கேற்றோர்: செந்தில்குமாரி, த.மரகதமணி, அன்புமணி, ச.இன்பக்கனி, புரசை சு..அன்புச் செல்வன், ஓட்டேரி பாஸ்கர், அன்பரசு.