சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் சாதனை விளக்கப் பரப்புரை- ஈரோடு முதல் கடலூர் வரை சுற்றுப்பயணத்தின் இரண்டாம் நாளான நேற்று (4.2.2023) திருப்பூருக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள் பொன்னாடை அணிவித்தார். திருப்பூர் மேயர் தினேஷ்குமார் பொன்னாடை அணிவித்து புத்தகம் வழங்கினார். திருப்பூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுச்சியுரையாற்றினார்.