“வீரமணியுடன் மதிய உணவு எனது நீண்ட நாள் ஆசை” – அண்ணாமலை

Viduthalai
1 Min Read
அரசியல்

 திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியுடன் மதிய உணவு சாப்பிட விரும்புவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

எதிர்கால அரசியல் தலைவர்களாக உருவாக பயிற்சி வழங்கப்படும் நிகழ்வில் கலந்துகொண்டு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். “ பாஜக தொண்டர்கள் மற்ற கருத்தியலை பின்பற்றும் நபர்களிடம் பேச வேண்டும். அப்படி பேசினால் நம்மில் அது பெரிய மாற்றத்தை உருவாக்கிடும். நான் இதை செய்திருக்கிறேன்.  திராவிடர் கழகத் தலைவர் 

கி.வீரமணியுடன் மதிய உணவு சாப்பிட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசைகளில் ஒன்றாகும்.

தமிழ்நாடு பாஜக தலைவராக பொறுப்பேற்கும் முன்பு, நான் சிபிஅய் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவை சந்திக்க வேண்டும் என்று கூறினேன். இதைக் கேட்டு பாஜக உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந் தனர். ஆனால் நான் அவரை பார்த்து வாழ்த்துப் பெற்றேன்” என்று அவர் கூறியுள்ளார்.  

– ‘இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ (அய்.இ. தமிழ்) இணையம், 5.2.2023

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *