காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி வர வேண்டும் என முதல் முதலாக கோரிய தமிழர் தலைவரை பாராட்டி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தோழர்கள் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்.கே. பகவதி, மாநில பொதுக் குழு உறுப்பினர் கே. ஜோதிமணி, மாநில INTUC தலைவர் புவனேஸ்வரி, மாநில இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் மரகதம், மாவட்ட மகளிர் அணி தலைவி வி. சத்தியா, ஆனைமலை வட்டார துணை தலைவர் எஸ்.வள்ளிநாயகம், கோவை தெற்கு மாவட்ட மேனாள் மகளிர் அணி தலைவர் ஆர்.கலாவதி, கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் கே. பத்திரிகிரி, மாவட்ட செயலாளர் ரஜினிகாளிமுத்து – அரசம்பாளையம், பொள்ளாச்சி நகர தலைவர் செந்தில்குமார், நகர பொதுச் செயலாளர் கே. காளியப்பன், கே.மூர்த்தி, நகர பொது செயலாளர் மணிகண்டன், ஆனைமலை வட்டார துணை தலைவர் கே.அய்யாசாமி, வடுகபாளையம் மற்றும் கே.சி. செந்தில்குமார் – நகர துணை தலைவர் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தனர். . உடுமலைப்பேட்டை ஒன்றிய பெருந் தலைவர் மகாலட்சுமி முருகனுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்தார்.