இன்று (7.2.2023) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்பிய திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அவர்களோடு தொலைப்பேசிமூலம் தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
‘‘நீங்கள் தமிழ்நாட்டின் பொதுச் சொத்து, உடல்நலனை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்று அறிவுறுத்தினார்.
நன்றி தெரிவித்த நாஞ்சில் சம்பத் அவர்கள், ஆசிரியரின் பரப்புரைப் பயணம் குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகக் கூறி, ஆசிரியர் தமது உடல் நலனைப் பார்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.