‘சமூகநீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல்’ விளக்க பரப்புரைப் பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்த முடிவு

Viduthalai
2 Min Read

மயிலாடுதுறை மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்

திராவிடர் கழகம்

மயிலாடுதுறை, பிப். 7- மயிலாடுதுறை மாவட்ட கழக கலந்துரையா டல் கூட்டம் 1.2.2023 அன்று காலை 10 மணி அளவில் மாவட்ட அலுவலகத்தில் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமை யில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஆ.ச. குணசேகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கி.தள பதிராஜ் அனைவரையும் வர வேற்று மாவட்ட கழக செயல் பாடுகளை எடுத்துரைத்து கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத்தினை விளக்கினார்.

மாவட்ட தலைவர் ஆ.ச. குணசேகரன், அமைப்பாளர் ஞான.வள்ளுவன் மற்றும் பொறுப்பாளர்களின் உரைக் குப்பின் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் இயக்க செயல்பாடுகளையும், தமிழர் தலைவரின் அயராத பணிக ளையும் சுட்டிக்காட்டி மயிலா டுதுறையில் நடைபெறவுள்ள திராவிட மாடல் விளக்க பரப் புரை பயணக் கூட்டத்தை மிக சிறப்பாக நடத்தவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பாராட்டு

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநில துணைத் தலைவராக அறிவிக்கப்பட் டுள்ள ஞான.வள்ளுவன் அவர் களையும், ஆய்வுக்குழு உறுப் பினராக நியமிக்கப்பட்டுள்ள கி.தளபதிராஜ் அவர்களையும் பாராட்டி சால்வை அணி வித்தார். நகரச் செயலாளர் பூ.சி.காமராஜ் நன்றி கூறினார்.

இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் அரங்க நாகரத்தினம், மயிலாடுதுறை நகர தலைவர் சீனி முத்து, ஒன்றியத் தலைவர் ஆர்.டி.வி. இளங்கோவன், குத்தாலம் ஒன்றியத் தலைவர் சா.முருகையன், செயலாளர் கு.இளமாறன், குத்தாலம் நகரத் தலைவர் சா.ஜெகதீசன், சீர் காழி நகரத் தலைவர் க.சபாபதி, கொள்ளிடம் ஒன்றியத் தலைவர் பி.ஆர். பாண்டியன், செயலாளர் பூ.பாண்டுரங்கன், செம்பனார்கோயில் ஒன்றியத் தலைவர் கனகலிங்கம், செயலா ளர் எஸ்.பி.கே.கவுதமன், பகுத் தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் அ.சாமிதுரை, பகுத் தறிவாளர் கழக நகரத் தலைவர் சித்தர்காடு க.செல்வராஜ், விடு தலை வாசகர் வட்ட பொறுப் பாளர் ஜெகன் சாமிக்கண்ணு, கழக தோழர்கள் தங்க.செல்வ ராஜ்,  வி.நெப்போலியன், பி.எம்.ஜி.மணிவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் எண்: 1

மாவட்ட கழக துணைத் தலைவராக செயல்பட்டுவந்த  கட்பீஸ் மா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்: 2

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஈரோடு தொடங்கி கடலூர் வரை (பிப்ரவரி 3 முதல் மார்ச் 10ஆம் தேதி வரை) நடைபெறவுள்ள சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரையின் நான்காம் கட்ட பயணத்தில்  7.3.2023 – செவ்வாய் மாலை மயி லாடுதுறையில் பொதுக்கூட் டம் நடைபெற ஒப்புதல் அளித்த தமிழர் தலைவர் அவர்களுக்கு மாவட்ட கழகத் தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இந் நிகழ்ச்சிக்கு சுவரெ ழுத்து, சுவரொட்டி, மற்றும் கழகக் கொடிகளை அதிக அள வில் பயன்படுத்தி பிரச்சாரம் செய்து நிகழ்ச்சியை வெற்றிகர மாக நடத்துவது என தீர் மானிக்கப்படுகிறது.

தீர்மானம்: 3

பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன் றம், விடுதலை வாசகர் வட்டம் இணைந்து மூன்று மாதங்க ளுக்கு ஒரு முறை கொள்கை விளக்க இலக்கிய நிகழ்ச்சிகளை ஒத்த கருத்துடைய இன உணர்வாளர்களை அழைத்து அரங்க கூட்டங்களாக நடத்து வது என தீர்மானிக்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *