தடகளப் போட்டியில் முதலிடம் பெரியார் பள்ளி மாணவிக்கு பாராட்டு

Viduthalai
1 Min Read
மற்றவை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட் டிகள் 4. 2. 2023 அன்று நடைபெற்றது .அதில் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பன்னிரண்டாம் வகுப்பைச் சேர்ந்த ஏ. நிஷா 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்து பரிசுத்தொகை ரூபாய்  3000த்தை தட்டிச் சென்றார். மேலும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார் என குறிப்பிடத்தக்கது.  போட்டியில் வென்ற வீராங்கனை மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ், ரவிசங்கர் ஆகியோரை பள்ளியின் தாளாளர், முதல்வர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *