தடகளப் போட்டியில் முதலிடம் பெரியார் பள்ளி மாணவிக்கு பாராட்டு

1 Min Read
மற்றவை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட் டிகள் 4. 2. 2023 அன்று நடைபெற்றது .அதில் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பன்னிரண்டாம் வகுப்பைச் சேர்ந்த ஏ. நிஷா 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்து பரிசுத்தொகை ரூபாய்  3000த்தை தட்டிச் சென்றார். மேலும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார் என குறிப்பிடத்தக்கது.  போட்டியில் வென்ற வீராங்கனை மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ், ரவிசங்கர் ஆகியோரை பள்ளியின் தாளாளர், முதல்வர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *