கூட்டணிகளை ஒழுங்குபடுத்துவது எங்கள் பணி அல்ல : தேர்தல் ஆணையம்

Viduthalai
1 Min Read

புதுடில்லி, அக்.31 “இந்தியா” கூட்டணி என்ற பெயரை பயன் படுத்த தடைகோரிய வழக்கில் அரசியல் கட்சிகளின் கூட்டணி களை ஒழுங்குபடுத்துவது தங்கள் வேலை இல்லை என்று தேர்தல் ஆணையம் டில்லி உயர்நீதிமன் றத்தில் பதில் அளித்துள்ளது. 

எதிர்க்கட்சிகளின் கூட்ட ணிக்கு “இந்தியா” என்ற பெயர் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி உயர்நீதிமன்றத்தில் கிரிஷ் பரத்வாஜ் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்து இருந்தார். கட்சிகள் தங்களது தேவை களுக்காக “இந்தியா” என்ற பெயரை பயன்படுத்துவதால் நாட்டின் நற் பெயருக்கு களங்கம் ஏற்படுவதாக வும் “இந்தியா” என்ற சொல்லை கூட்டணி பெயராக பயன்படுத்த தடை விதிக்க வேண் டும் என்றும் அதில் அவர் குறிப் பிட்டுள்ளார். இதற்கு பதில் அளிக் குமாறு ஒன்றிய அரசு மற்றும் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டில்லி உயர்நீதிமன் றம் அறிக்கை அனுப்பி இருந்தது. 

அதன்படி தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தனி நபர்களோ அமைப்புகளோ சேர்ந்து உருவாக்கும் அமைப்பு களை பதிவு செய்யும் அதிகாரம் மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது என்று தெரிவிக்கப்பட் டுள்ளது. மேலும் அரசியல் கட்சி களின் கூட்டணிகளை அங்கீகரிப் பதும் இல்லை, ஒழுங்குபடுத் துவதும் கிடையாது என்று ஆணையம் தெளிவுப்படுத்தி உள்ளது. ஜார்ஜ் ஜோசப் என்ப வருக்கும் இந்திய அரசுக்கும் இடையில் நடைபெற்ற வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் தேர்தல் ஆணையம் மேற்கோள்காட்டியுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *