போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், விபத்து களைத் தடுக்கவும், கார்பன் உமிழ்வைக் குறைத்து சுற்றுச்சூழலைக் காக்கவும், பேருந்து, தொடர்வண்டி, மெட்ரோ போன்ற பொதுப் போக்குவரத்துகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டியது அவசிய மாகும்.
இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கங்களின் சம்மேளனம், பூவுலகின் நண்பர்கள் ஆகியோருடன் திராவிடர் கழகமும் இணைந்து நடத்தும் மினி மாரத்தான் போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் சென்னை உள்பட 20 நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறைத் தோழர்கள் இந்த மினி மாரத்தானில் பங்கேற்கவும், ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபடவும், மேலும் பலரைப் பங்கேற்று இந்த மினி மாரத்தானின் நோக்கம் சென்றடையவும் வகை செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
சுற்றுச் சூழலைக் காப்பது நம் கடமை என்பதை உணர்வோம்! உணர்த்துவோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
முகாம்: திருச்சி
10.2.2023