ஆளுநர் மாளிகையா? பி.ஜே.பி. மாளிகையா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

2 Min Read

அரசு, தமிழ்நாடு

ராமநாதபுரம், அக். 31- ராமநாத புரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்தபின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

1963இ-ல் தேவர் மறைந்தபோது அறிஞர் அண்ணாவும், கலைஞரும் நேரில் வருகை தந்து மரியாதை செலுத்தினர். 1969இ-ல் பசும் பொன்னில் தேவர் நினைவிடத் தைப் பார்வையிட்டு அங்கு அரசு சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகளைச் செய்தவர் கலைஞர். 2007இ-ல் முதலமைச்சராக இருந்த கலைஞர், தேவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாகக் கொண் டாடினார். அப்போது பசும்பொன் தேவர் நினைவிடத்தில் ரூ.2.50 கோடி  மதிப்பில் அணையா விளக்கு, கலையரங்கம், புகைப்படக் கண் காட்சி, நூலகம் என பல்வேறு பணிகளை கலைஞர் செய்தார்.

மூக்கையாத் தேவர் முயற்சியால் மதுரை கோரிப்பாளையத்தில் அமைக்கப்பட்ட தேவர் சிலையை அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரியை அழைத்துவந்து திறந்து வைத்து விழா நடத்தியதும் கலைஞர் தான்.

மதுரை ஆண்டாள்புரம் பாலத் துக்கு தேவர் பெயரைச் சூட்டினார். கமுதி, உசிலம்பட்டி, மேலநீலித நல்லூர் ஆகிய இடங்களில் தேவர் பெயரில் கல்லூரி அமையக் காரணமாகஇருந்தவர் கலைஞர். 

மேலநீலிதநல்லூர் தேவர் கல்லூ ரியை ஆக்கிரமிப்பாளர்களிடம் 2021இ-ல் மீட்டுக் கொடுத்ததும் திமுகஆட்சிதான்.

பசும்பொன் தேவர் நினைவிடத் தில் பொதுமக்கள் மரியாதை செலுத்த வசதியாக ரூ.1.50 கோடியில் நிரந்தரமாக 2 மண்டபங்கள் அமைக்கப்படும் என 2 நாட்களுக்கு முன்பு அறிவித்துள்ளேன்.

ஆரியம் – திராவிடம்

இன்னாருக்கு இதுதான் என் பது ஆரியம்; எல்லோருக்கும் எல்லாம் உண்டு எனச் சொல்வது திராவிடம். இதை ஆளுநருக்குப் புரிய வைக்க வேண்டும். மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் வைக்க ஒன்றிய அரசிடம் கோரியுள்ளோம்.

ஆளுநர் மாளிகையில் பெட் ரோல் குண்டு வீசப்படவில்லை. ஆளுநர் மாளிகையின் எதிரே உள்ள சாலையில்தான் பெட் ரோல் குண்டு வீசப்பட்டது. நிகழ்வு தொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. ஆனால், பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வில் ஆளுநர் மாளிகை திட்டமிட்டு பொய்யைப் பரப்புகிறது.

ஆளுநர் மாளிகை பா.ஜ.க. அலுவலகமாக மாறியிருப்பது வெட்கக்கேடானது. இன்னாருக்கு இதுதான் என்பது ஆரியம், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது திராவிடம். இதை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *