சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தொழிற்சாலைகள் அதிகாரிகளுக்கு அமைச்சர் வலியுறுத்தல்

2 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, அக். 31- தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தொழிற்சாலைகள் இயங்கு கிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சி.வீ.மெய்யநாதன் அறி வுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாவட்ட வாரியாக நிலவும் சுற்றுச்சூழல் பிரச் சினைகள் தொடர்பாக மண்டல இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர்கள் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களுட னான ஆலோசனைக் கூட்டம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தலைமையில், சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹூ முன்னிலையில் சென்னை கிண்டியில் உள்ள வாரிய அலுவல கத்தில் நேற்று (30.10.2023) நடை பெற்றது.

அப்போது, கேரளாவிலிருந்து சட்ட விரோதமாக திருநெல்வேலி மற்றும் தென்காசி பகுதிகளில் கொட்டப்படும் மருத்துவக் கழிவு கள், அபாயகரக் கழிவுகளை கண் காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண் டும். கேரளத்துக்கு செல்லும் வாக னங்களிலும் ஜிபிஎஸ் டிராக்கிங் சிஸ்டம் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டிலுள்ள சிப்காட், சிட்கோ வளாகங்களை தொடர் ஆய்வு செய்து அவ்வளாகத்தினுள் அமைந்திருக்கும் பெரிய வகை (சிவப்பு) தொழிற்சாலைகள் சுற் றுச்சூழலுக்கு உகந்த புதிய மாற்று தொழில் நுட்பங்களுடன் இயங்கு கின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். தங்கள் மாவட் டங்களில் அமைந்துள்ள கிரா னைட் குவாரிகளை தொடர் ஆய்வுசெய்து கண்காணிக்க வேண்டும்.

நகராட்சி பகுதிகளிலிருந்து வெளியேறும் அன்றாட கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் அரு கில் உள்ள நீர்நிலைகளை மாசுபடுத்து வதை சுட்டிக்காட்டி அந்நகராட்சி களில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க அறிவுறுத்த வேண்டும். நகராட்சி திடக்கழிவுகள் குப்பை கிடங்குகளில் எரிக்கப்படுவதை தடுக்க வேண்டும். பயோ மைனிங் மூலம் திடக்கழிவுகளை பிரித்து அறிவியல் முறையில் கையாள தக்க நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள காய்கறி சந்தையிலி ருந்து வெளியேறும் திடக்கழிவு களை அறிவியல்முறையில் கையாண்டு மின்சாரம் தயாரித்தல் மற்றும் கரிம உரமாகமாற்றுதல் போன்ற நடவ டிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *