ஜார்க்கண்ட் மாநில ஆளுநர்
திருப்பூர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வாழ்த்து
கோவை – திருப்பூர் நண்பர் சி.பி. இராதாகிருஷ்ணன் அவர்களை குடியரசுத் தலைவர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமித்துள்ளார் என்பதை அறிய மகிழ்ச்சியடைகிறேன்.
தமிழ்நாட்டுத் தமிழர் ஒருவர் இப்படிப் பொறுப்பேற்பது சிறப்புதான்.
அரசியல் பிரமுகர் என்ற நிலை தாண்டி, ஒரு பொது மனிதராகக் கடமையாற்றி, அரசியல் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாத்து சிறப்பாகப் பணிபுரிவர் என்று நம்பி வாழ்த்துகளை கொள்கை வேறுபாடுகளையும் தாண்டி தெரிவித்து மகிழ்கிறோம்.
கி.வீரமணி
சென்னை தலைவர்
13.2.2023 திராவிடர் கழகம்