நிதி சேவை முதலீட்டு திட்டங்கள் விரிவாக்கம்!

1 Min Read

சென்னை,பிப்.13நகர்ப்புற மக்கள் தங்களின் நிதி ஆதாரத்தை பெருக்கிக் கொள்ள பல்வேறு முதலீடுகள் செய்துவரும் நிலையில் நாட்டின் பல பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு சேவைகள் கிடைக்க வேண்டும்  என்பதற்காக ஜே.எம். பைனான்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் தனது கிளை அலுவலக செயல்பாட்டை சென்னையில் விரிவுபடுத்தியுள்ளது.

பங்கு மற்றும் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. இங் குள்ளவர்கள் முதலீடு மூலம் தங்களது நிதி ஆதாரத்தைப் பெருக்கிக் கொள்வதில் ஆர்வமாக உள்ளனர். இதைக் கருத்தில் கொண்டே இங்கு எங்களது செயல்பாடுகளைத் தொடங்குவதோடு இங்கிருந்து எதிர் காலத்தில் விரிவுப் படுத்துவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது என இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் மொகந்தி தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *