பட்டுக்கோட்டையில் பெரியார் 1000 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

1 Min Read
மற்றவை

பட்டுக்கோட்டை,பிப்.14- பட்டுக்கோட்டை மாவட் டத்தில் பெரியார் 1000 தேர்வில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு பரிசளிப்பு சான்றிதழ் வழங்கி பாராட்டு விழா நடைபெற்றது.  

பட்டுக்கோட்டை நகர ஒன்றியங்களுக்கு உட்பட்ட பிருந்தாவன்  மேல்நிலைப்பள்ளி, எஸ். இ .டி மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அதிராம்பட் டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கழுகப்புலிக்காடு அரசு  உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற பெரியார் 1000 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், மற்றும் பங்கேற்ற மாணவர்கள் அனைவ ருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் 

ஆ.இரத்தின சபாபதி, ஒன்றிய தலைவர் ரெ.வீரமணி, ஒன்றிய செயலாளர் ஏனாதி சி.இரங்கசாமி, நகரத் தலைவர் பொறியாளர் சிற்பி சேகர் ஆகியோர் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தியும் பாராட்டியும் பேசினர்.

அனைத்துப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட இருபால் ஆசிரியர்கள் விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தி,வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *