செய்தியும், சிந்தனையும்….!

1 Min Read

ஈரோட்டிலேயே…

*தேர்தல் நடக்கும் ஈரோட்டையடுத்த பக்கத்து மாவட்டங் களில் முதலமைச்சர் கள ஆய்வு நடத்துவது தவறு.

– அ.தி.மு.க. குற்றச்சாட்டு

>>ஓ, ஈரோட்டிலேயே நடத்தவேண்டும் என்கிறார் களா?

எங்கே போச்சு?

*மேகாலயா, நாகலாந்து தேர்தலில் 80 பி.ஜே.பி. வேட்பாளர் களில் 70 பேர் கிறிஸ்தவர்கள்.

>>இப்பொழுது எங்கே போச்சு சிறுபான்மையினர் எதிர்ப்பு?

ஓ, அந்தக் கடவுளுக்கா?

*அமர்நாத் பனிலிங்கம் – 12 ஜோதிர் லிங்க தரிசனம்.

>>ஓ, கோடை காலத்தில் காணாமல் போகும் அந்தக் கடவுளுக்கா?

 அறிவுரைதான் மலிவானது!

*லோக்சபாவில் எம்.பி.,க்களுக்குள் வாக்கு வாதத்தில் ஈடுபடக் கூடாது. இதை மாநகராட்சியாக மாற்றாதீர்கள்.

– ஓம்பிர்லா, மக்களவைத் தலைவர்

>>ஆமாம், சபாநாயகராக இருந்து ‘பிராமணர்கள்’ சங்க மாநாட்டில் பேசலாம்!

யாருக்கு இந்த அறிவுரை?

*அரசியல் குறித்து ஆளுநர்கள் அதிகம் பேசக்கூடாது.

– ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 

>>யாருக்கு இந்த அறிவுரை? ஆளுநர்கள் ஆர்.என்.ரவிக்கும், தமிழிசைக்குமா? சேம் சைடு கோல் என்பது இதுதானோ!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *