செய்தியும், சிந்தனையும்….!

Viduthalai
1 Min Read

ஈரோட்டிலேயே…

*தேர்தல் நடக்கும் ஈரோட்டையடுத்த பக்கத்து மாவட்டங் களில் முதலமைச்சர் கள ஆய்வு நடத்துவது தவறு.

– அ.தி.மு.க. குற்றச்சாட்டு

>>ஓ, ஈரோட்டிலேயே நடத்தவேண்டும் என்கிறார் களா?

எங்கே போச்சு?

*மேகாலயா, நாகலாந்து தேர்தலில் 80 பி.ஜே.பி. வேட்பாளர் களில் 70 பேர் கிறிஸ்தவர்கள்.

>>இப்பொழுது எங்கே போச்சு சிறுபான்மையினர் எதிர்ப்பு?

ஓ, அந்தக் கடவுளுக்கா?

*அமர்நாத் பனிலிங்கம் – 12 ஜோதிர் லிங்க தரிசனம்.

>>ஓ, கோடை காலத்தில் காணாமல் போகும் அந்தக் கடவுளுக்கா?

 அறிவுரைதான் மலிவானது!

*லோக்சபாவில் எம்.பி.,க்களுக்குள் வாக்கு வாதத்தில் ஈடுபடக் கூடாது. இதை மாநகராட்சியாக மாற்றாதீர்கள்.

– ஓம்பிர்லா, மக்களவைத் தலைவர்

>>ஆமாம், சபாநாயகராக இருந்து ‘பிராமணர்கள்’ சங்க மாநாட்டில் பேசலாம்!

யாருக்கு இந்த அறிவுரை?

*அரசியல் குறித்து ஆளுநர்கள் அதிகம் பேசக்கூடாது.

– ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 

>>யாருக்கு இந்த அறிவுரை? ஆளுநர்கள் ஆர்.என்.ரவிக்கும், தமிழிசைக்குமா? சேம் சைடு கோல் என்பது இதுதானோ!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *