கோவில் வழிபாட்டில் பாகுபாடா? -மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

 மதுரை, பிப். 18- கோவில் வழிபாட்டில் எக்காரணம் கொண்டும் பாகுபாடு கூடாது என மதுரை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

மதுரை உயர்நீதிமின்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் மாதரசி அம் மன் கோவில் மற்றும் மேடை யாண்டி சாமி கோவில் உள்ளது. இதனை குலதெய்வ கோவிலாக, நாங்கள் பல தலைமுறையாக வழிபட்டு வருகிறோம். இந்தநிலை யில் கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து இந்த கோவிலில் எங்களை வழிபட விடாமல் ஒருதரப்பினர் தடுத்து வருகின்றனர். மேலும் அவர்கள், இந்த கோவில் தங்களுக்கு சொந்தமானது என உரிமை கொண்டாடி வருகின் றனர். ஆனால் இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் ஆகும். வருகிற 18ஆம் தேதி அந்த கோவிலில் கொண்டாடப்பட உள்ள மகா சிவராத்திரி விழாவில் நாங்கள் பங்கேற்று பூஜை மற்றும் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தோம். உரிய தீர்வு கிடைக்கவில்லை. எனவே தாழ்த்தப்பட்ட சமுதா யத்தைச் சேர்ந்த எங்களை, மேடையாண்டி சாமி கோவிலில் சிவராத்திரி பூஜையையொட்டி வழிபட அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர் தரப்பினரின் குற்றச்சாட்டுகள் குறித்து வருவாய் அதிகாரிகள் தலைமையில் அமைதிக் கூட்டம் கடந்த 15ஆம் தேதி நடந்ததாகவும், அதில் கடந்த ஆண்டைப்போல தற்போது வழிபாடு நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கோவில் வழிபாட்டில் மற்ற தரப்பினருக்கு அளிக்கப்படும் உரிமையைப்போல மனுதாரர் தரப்பினரும் உரிய முறையில் நடத்தப்பட வேண்டும் என்றும், வழிபாடுகளை பொறுத்தவரை எக்காரணம் கொண்டும் பாகுபாடு கூடாது என தெளிவுபடுத்துகிறேன். இதை வருவாய் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, விசார ணையை வருகிற 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *